இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 15, 2020

எனை விட்டுப்பிரிந்த உயிர்

கண்கள் பனிக்கிறது
இதயம் வலிக்கிறது
இருண்ட உலகில்
தனிமையின் தவிப்போடு
நடைப்பிணமாய் இன்னும்
தந்தையின் பிரிவில்
தவிப்போடு நான்

கொரோனாவின் தாண்டவம்
உலகையே உலுக்கிக்கொண்டிருக்க
ஏப்ரல் மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமை
வழமையான நாளாய் ஐக்கியமாகியிருக்க
வானலை வழி அழைப்பொலியோடு
அதிர்வலையாய் ஓலக்ககுரல்கள்
புரியாது நானும் உறைந்து போனேன்

என்னை உலகுக்கு ஈர்ந்தளித்தவரின்
அந்திம நொடிகளின் போராட்டம்
ஈற்றில் உலகம் விட்டகன்றார் என்றார்கள்
துரதேசத்து துண்டிப்புகளோடு
துவண்டிருந்த நான் துடித்தழுதேன்
துச்சமென்றானது என்னுயிரும்

ஆசுவாசம் கொண்டேன்
ஆறத்தழுவல்களற்று துவண்டேன்
என் தந்தைமுகம் காணது
சிந்திய கண்ணீரோடு
இறுதிக் கடமைகளுக்காய்
அறிவுறுத்தலளித்தேன்

மின்னலடித்தோய்ந்தது போலானது
சாலித் தண்டயலின் மகனென்பது
எனக்குப்பெருமை
அத்தனை பிரபலமம் என் தந்தை
ஊரார் முழுவதும் அவரின் உறவுகள்
ஆதலால் ஊரின் தலைமகன் போலனவர்

அவர் வழி முட்கள் கூட
விலகியதை கண்டிருக்கிறேன்
சாந்தமாய்ப் பழகுவதால்
ஏந்தலாய்த் திகழ்ந்திருக்கிறார்
ஏய்த்துப் பிழைக்காத உத்தம  உழைப்பாளி
குணத்தால் செல்வந்தன்
தகப்பனாய் எனது வழிகாட்டி

இறைவனின் படைப்பின்
விதிப்படி நடப்பவைகளை
ஏற்பவர்களாகிறோம்
அப்படித்தான் என் தந்தையின் மரணம்
இன்றய உலகத்து மரணங்களும் அப்படியே
எந்த நொடியிலும் நிகழக்கூடிய
எம் வாழ்வின் அந்திமம் மரணந்தான்

மரணத்தோடு மாறாத மனிதர்களை 
மனிதத்துவமற்ற மிருகங்களாய் காண்கிறேன்
என் தந்தையின் இருப்பில் மாறாதவை
அவர் மறைந்தும் மாறாதது ஏமாற்றமளிக்கிறது


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...