இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, April 14, 2014

எச்சரிக்கை எச்சரிக்கை......(BBS)


கடிவாளமிட முடியாக் 
காட்டுமிராண்டிகள் போல் 
குதறித்திரியும் BBS எனும் 
பொறுப்பற்ற சமுகம் 
சாவுதேடிக் கூத்தடிக்கிறது 

எங்களதே தேசமென்ற 
அவசியமற்ற உரிமையுடன் 
அவிழ்த்து விட்ட அடாவெடித்தனங்களை 
அரங்கேற்றி வருகிறார்கள் 
அறிவிலிகள் போல்.......

இலங்கை எனும் தேசத்தின் 
உரிமையும் உடமையும் - அதில் 
அவதரித்த உயிர்களிலிருந்து 
பாகுபடுத்திடத்தான் முடிந்திடுமா ?- ஆதலால்
உனது - எனது வாதமெதற்கு!!!!!

மதங்களைக் குறிவைத்து 
மனங்களைக் குமிறச்செய்து 
மனிதங்களை வதைப்பதற்காய் 
போர்தொடுக்கும் சாத்தான்களே 
அடங்குங்கள் ......அழிந்திடுவீர்கள்

நாங்கள் ஆயுதங்களற்ற நிராயுதபாணிகள் 
துஆவென்னும் எங்களாயுதம் 
உங்களை தூவம்சம் செய்திடும் 
அமைதியோடுள்ளதால் அடங்கிடுவார்களென 
பகற்கனவு காணாதீர்கள்!!!

மார்க்கம் கற்றுத்தந்த 
பொறுமையின் சிகரங்களைக் 
காத்துநிற்கும் எங்கள்  சமுகம் 
வெற்றியாளர்களே.....அவர்களின் 
வெறி கண்டிடத் தூண்டாதீர்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Kalaimahan said...

மனித ம னத்தை சல்லடையாக்கும் சாத்தான்களே! – ஹாஷிம்
Posted by: admin on April 20, 2014 கவிதை 1 comment
http://ceyloncnews.com/?p=2054

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...