இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, January 2, 2015

என் சுடரொளி நீ

வளமான இரவுகள் 
வறுமையாய்க் கழிகிறது 
தனிமையின் வேதனைக்குத 
துணையாய் உன் நினைவுகள் 

கணப்பொழுதும் பிரிந்திடாக் 
கழிப்பில் மகிழ்ந்து - என் 
கற்பனைக்கும் எட்டிடா 
சுவர்க்கத்தினைக் காட்டினாய் 

தேயும் நிலவில் 
பௌர்ணமி நிகழ்வாய் 
கடந்திடும் நாட்களில் 
சில நாட்களின் தரிசனம் 

இவ்வுலகில் நான் கண்ட 
சுடரொளி நீ 
சுழலும் தினங்களை - உன் 
நினைவுகளால் மாத்திரம் 
சுகமாக்குகின்றேன்

நீயின்றிய இன்றய பொழுதுகளில் 
சிற்றின்பமும் கசப்பாகி 
அத்தனை இரவுகளும் 
தனிமையில் தளர்கிறேன்

வேண்டும் நீ என்னோடு 
வேதனைக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய் 
வேறு வழியின்றிக் காத்திருக்கிறேன் 
வரும் வரை விண்ணோடு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இதையத்ததை நெருடும் வரிகள் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...