இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, December 30, 2014

ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....


என் மனம் சிறகடித்துப்பறந்திருந்தது
ஆயிரமாயிரம் வார்தைகள்
ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது
என் தலைவனின் முடிவுகளுக்காய்
அத்தனையும் காத்திருந்தது

எங்கே உங்கள் தீர்மானம்
வரலாற்றுப் பிழையாகிடுமோவென்று
உன்னிப்பாய் ஊர்ந்தவண்ணமிருந்தேன்
உளம் மகிழும் முடிவுதந்து - மனங்களில்
முடிசூடா மன்னனானாய்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
பட்சிகள் பல தன்பங்குப் பா ஓதுகின்றன
காதில் வாங்கிடாது - வேங்கையாய் 
உம்வழியில் வீறு கொண்டு நடந்திடுங்கள் 
நாளைய சரித்திரம் காத்திருக்கிறது 

எட்டப்பர் கூட்டம் எள்ளிநகையாடுகின்றனர் 
அவர்களின் மனசாட்சிக்கே நாளை 
பதில்சொல்லாமல் தவித்துநிற்பர் 
சமூகமென்னும் பெருங்கடலுடன் 
விளையாடுகின்றனர் பேரலை மறந்து 

பெருவெள்ளங் கடந்து 
மனிதவெள்ளத்தின் ஆழங்கண்டு 
ஆட்சியாளர்களின் அகமழுகிறது 
ஆழும் போதே ஆற்றும் சேவையற்று
ஆசைக்கு அடிமையாயிருந்தனரே......

MY3 என்னும் சுனாமி 
செல்லா இடங்களெல்லாம் சென்று 
வெல்லும் சூட்சிமம் அமைத்து 
நல்லோர் யாவரையும் சேர்த்து 
நாளைய நலவுக்காய் காத்திருக்கிறார்

பெருந்தலைவன் அஷ்ரஃபின் வழியில் 
உம்மோடு பயணிக்கும் நாங்கள் 
உம் சுட்டுவிரல் திசையில் 
துணிந்து நின்று உயிரும் விட 
உளமாறக் காத்திருக்கிறோம் 

நாளை தோற்றுவிட்டால்  
என்ற கேள்வியில் பயணமெதற்கு 
நாளைய தீர்ப்புக்கு அதிபதி எம் இறைவன் 
தோற்றாலும் துவண்டிடா 
துணிவுள்ள சமுகம் எம்முடையது 

நாளைய சந்ததிக்காய் 
இன்றைய முடிவில் உறுதியாகி
பெறுமதியான தீர்வுகளுக்காய் 
ஒன்றுபட்டு உலகையாள 
இன்றே புறப்படு என் தோழா.............
.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...