இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, December 14, 2014

மறதி வேண்டும் மானிடா....!!

இறைவனின் கொடையிது 
அற்புதக் கணமிது 
மறதிக்கு மருந்து தேடி 
மாந்தர்கள் அலைவதுண்டு 

மறக்கத் தெரிந்த மனிதன் 
மகிழ்வோடிருக்கிறான் 
மனதின் காயங்களெல்லாம் 
மறப்பதாலன்றி வடு மாறுவதில்லை 

கடந்து வந்த பாதைகளில் 
கசப்புணர்வுகள் பலகோடி
நாளைய நிம்மதிக்காய் 
அவைகளை மறந்திடலே மருந்தாகிடுமே

எதிர்காலம் நோக்கிய பயணத்தில் 
திரும்பிப் பார்த்து நடந்திட முடிவதில்லை 
பாதிவழியில் தடுமாறிட 
சந்தோசவாழ்வில் தடுக்கிவீழ்வதாகிடும் 

மனிதனின் ஆற்றலறிந்த இறைவன் 
மறதி தந்து மகிழச்செய்திருக்கிறான் 
மனதின் ஆழுமையில் - மனிதர்களால்  
மறப்பதின்றி மகிழ்ந்திட முடிவதில்லை

மறப்பதுவும் மன்னிப்பதுவும் 
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே 
மன்னித்து மறந்துவிடு - உன் 
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்  

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...