இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, March 22, 2015

பெண்மை போற்று......!!!!!


ஆண்மை என்ற தலைக் கனத்தின் 
அத்திவாரமே பெண்மை - இவ்வுலகை 
ஆழப் பிறந்த அரசிகளின் 
அரியணையே பெண்மை 

நாணிக் குனிந்து நல்லவளாய் 
நானிலம் போற்றும் பெண்ணவளாய் 
நா காத்து நலம்பெற்ற 
நங்கையர்தான் எங்கே......????

வீடு துலங்கும் விளக்காய் 
நாடு சிறக்கும் பெண்களாய் 
கடந்து வந்த பாதையில் 
குறைந்து விட்டதெம் குலப்பெண்மை 

ஆங்காங்கு ஆண்மை கொண்ட பெண்களால் 
பெண்மை அடையும் ஆண்களின் 
தொண்மை போற்றிடத் துவண்டு 
தோற்றே போகிறான் 

பெண்மை பெண்ணின் அடையாளம் 
பெற்றவளும் பிறந்தவளுமாய் 
உலகில் சிறந்தே சீர் பெற்றிட 
சிகரம் பெண்மையிலாக்கிடணும் 

அச்கம் மடம் நாணம் பயிர்ப்பு 
என்னவென்றே தேடுகின்றனரின்று 
பெண்மையின் அடையாளங்கள் 
எது என்று கூகிளை நாடுகின்றனரே.......!!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...