இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, August 5, 2015

எம் முகவரி எம் கையில்


வாக்கு எனும் பலம் கொண்ட யானை நீ 
சாக்குப்  போக்குகள் எனும் சங்கிலி கொண்டு 
வருகிறார்கள் மயிலிலும் வெத்திலையிலும் 
மரம் உன் தீனியானதால் பலசாலிதான் நீயென்றும் 

பத்துப்பேர் வெத்திலையில் நின்றார்களன்று - அந்தப் 
பத்துப்பேரும் தொங்குகிறார்கள் மயிலின் காலிலின்று 
செத்துப்போன பாம்புகளாய் அதன் தலைமைகள் 
சத்தமின்றி சங்கறுந்து நிற்கிறார்கள் 

மேடைக்கு மேடை கூச்சமின்றி ரா பிச்சை கேட்கிறார்கள் 
மரமென்ற செல்வந்தனிடம் மண்டியிட்டு நிற்கிறார்கள் 
மகிழும் எம் தலைவன் மனமுவந்து மன்னிக்கிறார் 
ஆனாலும் பாடமொன்று கற்பிக்க காலமொன்று வரும் 

சதாவின் சூட்சிகள் முறியடிக்கப்பட்டு 
அதாவை வீட்டுக்கு காவல் வைக்கப்படும் 
ஹொறாவின் கொட்டம் அடங்குகின்ற நொடியில் 
சின்னாபின்னமாகிடுவார்கள் சில்லறைகள் 

முழுமதி எம் தலைவனே முத்தான மூன்றை முன்னுரைத்து 
முழு இலங்கைக்கும் முடிசூடா மன்னனாய் 
எம் சமுகத்தின் காவலனாய் வலம் வருகிறாய் 
முத்துக்கள் மூன்றையும் வித்துகளாய் 
விதைப்பதை எம் கையில்லவா ஒப்படைத்திருக்கிறாய் 

எம் மரத்தின் சத்தான போராளிகள் - யானைக்கு 
மொத்தமாக வாக்களித்திடக் காத்திருக்கிறோம் 
நிச்சயிக்கப்பட வெற்றியுடன் ஒன்று  சேர்ந்திட 
தொக்கி நிற்பவர்களையும் கைகோர்த்திட அழைத்து நிற்கிறோம் 

அன்பார்ந்த போராளிகளே வாக்காளர்களே 
சுயநலக்காரர்களின் விமர்சனங்கள் பல்லாயிரம் 
அயலவர்களின் ஒற்றுமையிலேனும் நாம் கற்று 
எமக்கான முகவரியை நாமே எழுதிக்கொள்ள வேண்டிய 
காலகட்டத்தில் உள்ளதை மறந்திடாதீர்கள் 

நாளைய தேசத்து எம் சந்ததியினருக்காக
இன்றய எம் வாக்கு முக்கியமானது 
அற்ப சுகத்திற்காய் அடகு வைத்து 
சமூகத்தின் நாசக்காரர்களாய் மாறிடாதீர்கள் 
ஒன்று படுங்கள் உலகையாளலாம்.  

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...