இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, September 16, 2015

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

மரமொன்று விதைத்து 
ஒற்றுமை என்னும் உரமிட்டு
ஆல விரூட்சமாய் வேரூண்றிட 
வகைசெய்த தலைவன் நீ.....

அன்றைய இத்தினத்தில் 
காற்றலைச் செய்தியாக 
வானூர்தி விபத்தில் - உம் 
மரணமென்றார்கள்....

வீதிகளெங்கும் மரண ஓலம் 
மக்களுக்காய் உழைத்தவனின் 
மரணத்தைக் கூட மறுத்தது மனங்கள் 
விழித்திருந்து விடை கொடுத்தார்கள் 

15 வருடங்கள் கடந்துதான் விட்டது 
பாதகத்தின் சூத்திரமின்னுந் துலங்கவில்லை 
நீ வளர்த்த தலைமைகளின்னும் 
வினவியதாகவும் தெரியவில்லை....

உம் மறைவில் ஒன்றுமட்டும் 
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி 
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில் 
மட்டும் ஒப்பாரி  வைக்கிறார்கள் 

நீ காட்டிய வழியில் 
இன்றொரு தலைவன் பயணிக்கிறான் 
ஆனாலும் அன்றைய நிலை இன்றில்லை 
எதிர்காலமதை வென்றிடுமோ தெரியவில்லை 

நானன்று பாலகனாய் இருந்தபோது 
என் மண்ணில் உன் மேடையில் 
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு 
எனையழைத்து உச்சி மோர்ந்தாய் 
மெய்ச்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது 

நீ ஓங்கிய விரல் கண்டு 
வீங்கியது ஆட்சியர்களின் உள்ளம் 
நீ வகுத்த வியூகங்களால் 
வியர்த்தார்கள் பயந்து 
வீழ்த்தி விட்டார்கள் கோழைகளாய் 

சுவனமது உனக்காகியது - உம் 
சுவடுகள் மட்டும் அசைபோடப்படுகிறது 
உனைத் தலைவனாய் ஏற்றவனென்றும் 
விலைபோகாத போராளியாய்
 உன்வழியில் மரணித்திடுவான்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Anonymous said...

Thank you for the Poem.
We miss Mr.Ashraf.
Allah will bless him.
Izzath Dubai UAE ( From Tamil Nadu) aizzath@hotmail.com

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நினைவு நெஞ்சை அள்ளிச்சென்றது... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...