இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 29, 2015

உனை உரிமையுடன் வாழ்த்துகிறேன்...... (பஸ்மில்)


எனை ஈன்ற தாய் பாலமுனை 
ஈன்றிருக்கிறதோர் கல்விமானை 
கல்விப்பணிப்பாளராய் மகுடம் சூடி
எம் மண்ணுக்கு மகிழ்வு தந்தாய் 

பெற்றோருக்குப் பெருமை சேர்த்து 
சகோதரங்களுக்குப் புகள்சேர்த்து - எம் 
பிரதேசத்திற்கே நலன் சேர்த்திட 
காலூன்றினாய் கல்வியாளராய்..

பின்தங்கியதெம் பாடசாலையானாலும் 
முன்னேறியதெம் கல்வியென 
நிரூபித்திருக்கிறாய் என்றும் - நின் 
சேவைகளால் வென்றிடு மனங்களை 

எதிர்காலத்தெம் சந்ததியினருக்கு 
உதாரணப் புரிசராய் நீ விளங்கி 
இன்னும் பல கல்விமான்களை 
உருவாக்கிட வகை செய்திடு உன் வழியில்

அனைவரும் உனை பாராட்டிட 
எனக்கும் ஒர் தற்பெருயுன்னால் 
நான் கற்பித்த மாணவன் 
பலர் கற்றுக்கொள்ளக் 
காவலனாய் வீற்றிருக்கிறாயென்று....

துடிப்பான இளைஞன் நீ....
துள்ளலான உன் செயல்களால் 
எம் இளைஞர்களுக்கெல்லாம் 
சீரிய வழிகளைக் காட்டிச் சென்றிடு....

நீ சமூகச் சிந்தையில்
உயர்ந்தவன் என்பதை நானறிவேன் 
திரட்டு உன் தோழமைகளை 
தோலுரித்திடு எம் சமுகத்துக் குற்றங்களை 

அந்த வகையில் ஒரு விண்ணப்பம் 
 சீதனம் வாங்காத மகர்கொடுத்த
உயரிய மணாளனாய் உன் துணை தேர்ந்து 
சுவனத்தினை அடைந்திட உறுதிகொள்...

உன் வாழ்வில் மென்மேலும் 
பல வெற்றிகளடைந்து 
ஈருலகிலும் மகிழ்ந்திட 
இருகரம் ஏந்துகிறேன் இறைவனிடம்  


குறிப்பு :  பாராட்டு விழாவுக்கு முன்னர் எழுதிய கவிதையிது பிரசுரம் தாமதமாகிவிட்டது என் மனதில் எழுந்த மகிழ்வை வரிகளால் வடிவம் கொடுத்து உமை வாழ்த்த ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொண்டேன். நன்றி 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

நன்றி...

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...