இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, January 6, 2016

தனயனின் தவிப்பு........


தாய் தாயென்று தனயனிங்கு தவிக்கிறேன் 
தரணி உள்ளமட்டும் உன்மடியில் 
துயில்கொள்ளத் துடிக்கிறேன் 
தருவாயா தாயே உன் மடி தருவாயா???

தஞ்சம் உன்னுடனாகி - என் 
நெஞ்சில் உனைத்தாங்கி 
தாலாட்டிச் சீராட்டிட -  தாயே 
வந்துவிடு என்னுடனே வந்துவிடு 

ஒத்தையாய் பெத்தெடுத்து 
ஒய்யாரமாய் வளர்த்தெடுத்து 
உலகறியச் செய்தவளே உன் 
உளம் மகிழக் காத்திடுவேன் 

என்னுள் உனக்கான ஏக்கங்களுடன் 
உன் உதிரம் ஓடிக்கொண்டிருக்கிறது 
நீ என்னோடு இல்லையென்று 
என் உணர்வுகள் உணர்விளந்திருக்கிறது   

அம்மா நீ என் உலகம்மா 
இல்லையென்றால் நான் இல்லையம்மா
எத்தனை உயர்வினை அடைந்தாலும் 
நீயின்றி அது துச்சமம்மா 

தாலாட்டு உன்மொழியிலின்றி 
துயில்கொள்ளவும் பிடிக்கவில்லையம்மா 
நீயின்றிய மரணம் கூட - எனை 
சேர்க்கவிருப்பதும் நரகத்தில்தானெயம்மா 

இறைவனை முன்னிறுத்தி
மன்றாடிக் கேட்கிறேன் உன்னிடமே
வரமொன்று தந்துவிடு மடிவதற்குள் 
வாழும்வரை வந்துவிடு என்னோடு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Nagendra Bharathi said...

அருமை

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...