இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 19, 2013

வழிவிடு என் சமூகத்திற்கு........

எத்தனை வாலிபர்களின்
வயதுகளிலும் குருதிகளிலும்
செய்துவைத்த பஞ்சணையில்
இன்னும் துயில்கொள்ளும் - எம்
தலைவர்கள் இன்னுந்தான்
உறங்குகிறார்கள்

சமூகப் பற்றென்று பாசாங்கு செய்து
வென்றதினால் வாழ்வுபெற்ற
நடிகர்கள் கூட்டம் அடுத்த
நாடக மேடைவரை காத்திருக்கிறார்கள்

அன்றய எம் சமுகத்தின் ஒற்றுமையை
உதாரணமாய்க்கொண்டு இன்று
வடக்கு சமூகத்தவன் சாதித்திருக்கிறான்
கிழக்கைக் கூறுபோட்டு விற்றவர்கள்
நாணித்து நாதியற்றவராகினரே.....

நாலாதிசையிலும் அடிபடும்
அவமானச் சமூகமாய் மாற்றப்பட்டு
அல்லோல கல்லோலப்படும்
தன் சமூகத்தை வழிநாடாத்தத் தகுதியற்ற
அரசியல் அசுரர்களாய் மட்டும்
அரண்மணையில் வீற்றிருக்கின்றனர்

உமிழவும் விழுங்கவும் முடியாத முட்களாய்
பொறியொன்றில் அகப்ப்பட்ட மானாய்
தன் பொன்னான காலத்தை
இன்று சமுகத்தின் சிதைவுக்காய்
தாரைவார்க்கும் தன்னலத் தலைமைகளின்
பின்னே விடிவுக்காய் காத்திருக்கிறது சமூகம்

அபிவிருத்தி வேண்டாமென்று
ஆயுள்வரை சமூகப்பற்றோடு வாழ்ந்தவன்
ஒட்டாண்டியாய் இன்னும்
வாழ்வுக்கு வழிதேடுகிறான்
நீயொரு தலைவனாய்
என்ன கைமாறு செய்தாய்

வேண்டாமையா வேண்டாம்
உம் தயவெதுவும் வேண்டாம்
நாளைய என் சமூகத்தின் எழுச்சிக்காய்
இன்று நீ வழிவிட்டுப்பார்
வீணர்களெல்லாம் வியர்த்து நிற்பர் 
வீறுகொண்டெழுந்து விண்ணைத்தொடும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// என்ன கைமாறு செய்தாய்...? ///

சரியான கேள்வி + சிந்தனை...

தொடர வாழ்த்துக்கள்...

Anonymous said...

நிச்சயம் விண்ணைத் தொடும்!

அருமை! அருமை என் இனிய சகோ!

Seeni said...

maasha allah!

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...