இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 21, 2015

புதிய இலங்கையுன்னால்........




பல்லாயிரம் வருட வரலாற்றில் 
இலங்கைத் தலைவர்களுள் உன் அவதாரம் 
இன்று யாழ் மண்ணில் உன் வரவு கண்டு 
உண்மை உணர்வுகளுடன் மெய்ச்சிலிர்க்கிறது 

வாய்ப் பேச்சு அரசியல் வாதிகளின் வாயடைத்து 
உண்மை அரசியல் வழி எதுவென்றுணர்த்தி
வறியவர்களின் வாய் மொழி கேட்டு 
புத்துணரச்சியும் வழங்கி நிற்கின்றாய்  

வாக்கிடும் காலம் மட்டும் வாதங்கள் செய்து 
வெற்றியாளர்களாய் மகுடம் சூடிவிட்டு 
வறியவன் பிச்சையில் அரியாசனமேறி 
வந்த வழி மறந்த சல்லாப வாழ்வவர்களுக்கு 

மக்களறியா மொழிச்சொற்களானாலும் 
மகிழ்வு தரும் மென்மை கொண்டு 
அன்னியோன்யமாய் அரவணைத்து 
பாசப் பரிமாற்றத்தில் மனசிங்கு அழுகிறது 
ஆனந்தக் கண்ணீர்களோடு 

எத்தனை தலைமைகள் ஆண்டிருந்தும் 
அதே ஆண்டியாய் வாழ்க்கை 
உன் காலடித் தடம் கண்டு 
யாழ் அன்னையும் அழுகிறாள் மகிழ்ந்து 

என்ன செய்தாயோ எதைச் செய்வாயோ 
நீயே உனக்கு அத்தாட்சி 
உன் வருகையில் வரம் கிடைத்திட்டதாய் 
வளரும் குழந்தையும் மகிழ்கிறதிங்கு 

அடித்தவனே அணைக்கிறானென்று 
திரும்பியுனைப் பார்க்கிறது உலகம் 
தீண்டாதோரும் திகைத்திடுமளவு 
தீர்வுகளைத் தொடர்ந்திடு மகிழ்ந்து 

அஷ்தமனக் காலங்களோடு 
அழுது புரண்ட நாட்கள் மறக்க 
அன்னையாய் உச்சிமோர்ந்து 
அகம் நிறைந்த அபிவிருத்திகளைத் தந்துவிடு 

புதியதோர் உலகம் படைக்க 
புத்துணர்வும் உன்னால் பிறந்திருக்கிறது 
புதுமைப் புரட்சியமைத்து 
புதிய தலைவனாய் தொடர்ந்திடு 
புதிய இலங்கையையும் அமைந்திடும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

நிஷா said...

நல்லது,மாற்றங்கள் தொடரட்டும்,நல்லதே நடக்கட்டும். உணர்வுக்குவியலாய் கவி வரிகளும் தொடரட்டும்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...