இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, March 21, 2017

வாழப்பிறந்த நாம்......


இல்லறவாழ்வு என்பது 
இன்பமானது என்றனர் 
இணைகள் பிரிந்திங்கு 
இன்னல்களோடு தவிக்கின்றனர் 

துறவறமான வெளிநாட்டால் 
துன்பங்களின் சுமைகளால் 
தொடர்கின்ற பிரிவுகளால் 
வேதனையான வெறுப்புகள்தான் 

காசுக்காய் சென்ற இடத்தில் 
வேசிகளாய்ப் போனவர்களும் 
வேடமிட்டு வாழ்ந்தாலும் 
பாவிகளாய் ஆனவர்களும் 
தோல்விகளோடுதான் சங்கமிக்கின்றனர் 

மதிக்கப்படாத உணர்வுகள் 
மிதிக்கப்படும் உயிர்களாகி 
நிரந்தரமான பிரிவுகளடைந்து 
நிம்மதியற்ற வாழ்வுடன் 
நிராயுதபாணியாகின்றனர் 

மாய உலகமிதுவென்று 
மாய்த்துக் கூறினாலும் 
பகட்டு உலகமொன்று 
பொய்ப்பித்துக்கொண்டிருக்கிறது 

கஞ்சி குடித்தேனும் 
கால்வயிறு நிறப்பிக் கொண்டு 
காலம் முழுதும் சேரந்தே வாழ
வாழ்க்கைப் பயணம் தொடர்ந்திடணும் 

வாழப்பிறந்த நாம் 
வாழ்விழந்து தவித்து 
வாழ்வளித்து என்னபயன் 
அடைந்த வாழ்வையாவது  
வாழ்ந்திடப் புறப்படுங்கள் 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...