உவமானங்கள் தேடியலைந்தேன்
என் காதலையும் உணர்த்திட
உனைக்கண்ட மாத்திரத்தில்
மொழிகள் மறந்த ஊமையாகிறேன்
காதுகளுக்குக் கேட்காத ஒலிகளோடு
உன்வார்த்தைகளை மட்டும்
இனிமையான இசைகளாயொப்பிட்டு
தினமும் ஒலிக்கக் கேட்கிறேன்
கண்களைத் திறக்க மறந்து
இருள்மயமான உலகமாகி
பசுமையான கற்பனைகள் மாத்திரம்
இன்பமயமான வாழ்கையாகிறது
