இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, April 18, 2011

வாடும் மலரொன்று....

வாடிய மலரொன்றின் 
வதனங்களில் மிளிர்கிறது சோகம் 
வண்ணமலாராய் சூடமறந்த 
மனிதங்களினால் அவலம் 

பார்வையில் பலதேடல்களுடன்
பார்வையிழந்த மனிதங்கள் மத்தியில் 
தானும்வாழ்ந்திட மலர்விற்பனை 
மனமுள்ள ஒருவராவது 
மகிழ்விக்க மாட்டாராவென்று 

விற்பனையிலும் ஒரு செய்தியறிவிக்க
கைகளில் ரோஜாமலரேந்தி...
உலக முட்களின் நடுவில் 
நானும் ஒருமலரானேனென்று 

அன்று பறிக்கப்பட்ட மலரொன்று 
வாடிநிற்கிறது இங்கு 
இன்று பறிக்கப்பட்ட மலரையாவது 
வாடுவதற்குள் வாங்குவீர்களா???

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...