இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 13, 2010

வேண்டாம் வீண்விரயம்





உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
பட்டிணியின் கோரத்தில்
பரிதவிக்கும் மக்களுண்டு

கிடைத்ததை மட்டும் உண்டு
மறு தினத்திற்காய் தேடி அலைந்து
கிட்டியும் கிட்டாத நிலையில்
அவதியுறும் மனிதம் உண்டு

எவ்வுலகம் எப்படியோ
எம்முலகம் இப்படித்தான் என
ஊர் கூடி தின்னும் அளவு
ஒரு தியாலம் படைக்கின்றாய்

ஒரு வயிறு கொள்ளுமளவு
ஒரு பகுதி உண்டுவிட்டு
வறியோர் நிலை மறந்து
கிடங்கிலல்லவா கொட்டுகிறாய்

ஈகையின் சிறப்பு மறந்து
வீண்விரயம் நோக்காகி
சமநிலையும் சாராது
அனியாயம் செய்கின்றாய்

இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...