இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, June 30, 2010

உறங்குவாயா மனமே.....


நிலையற்ற சிந்தையுடன்
நிம்மதி தேடி அலையும்
உருவமற்ற ஆட்சியாளனே
உன்னால் உறங்கமுடியாதா?

உடல் என்ற எந்திரத்தின்
இயக்கம் தரும் இயந்திரம்
உன்பாதை மாறினால்
உபாதை உடலைச்சேரும்

உனக்கு அடிமையாகிய
உவமான மனிதம்கள்
உனைச்சொல்லி மாளாது
உலகையும் துறந்தனர்

நண்மையும் நீயாவாய்
தீமையும் நீயாவாய்
அடையும்வரை ஆடுவாய்
பட்டவுடன் தேடுவாய்

உனைத்தாலாட்டி
உனக்கு அறிவளித்து
உன்னை உறங்கச்செய்யாமல்
உலகை வெல்ல முடியாது..

மனம் என்ற மனதை
மளுங்கச்செய்யாது
மதி என்ற வல்லமையுடன்
இவனை வெல் மனிதா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

அகல்விளக்கு said...

நல்லாருக்குங்க நண்பரே....

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி தோழியே.....

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...