இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 9, 2014

கவிதைக் கொலைகள்

கவிதைகளின் துணையில் 
காதல் காவியங்களின் 
அரங்கேற்றம் நடக்கிறது 
காதலை உள்ளம் உணரும் போது 
கவிதைகளும் உயிர்பெறுகிறது 

அத்தனை கவிஞர்களும் 
காதலிப்பதால்தான் - அவர்களின் 
கவிதைகளுடன் வாழ்கிறார்கள் 
நேசிக்கப்படாத கவிதைகளால் 
மனதளவில் வஞ்சிக்கப்படுகிறார்கள் 

காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 

அத்தனை கவிதைகளும் 
மொத்தமாய் ஒவ்வொரு உயிர்கள் 
வெறுப்பை ஆயுதமாக்கி 
பொறுப்பின்றிய கொலைகள் 
கவிதைக்கொலைகளாய் சாதாரணமாகிறது 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...