இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 17, 2014

அறிவீரோ......(படம் தந்த கவிதை)


என் எழில் காணும் 
கண்கள் கொண்ட காதலால் 
என் பசுமைக்காய் 
தவமிருக்கிறார்கள்  

என்னை அரவணைத்து 
தன் மடிமீது தவளவிட்ட 
நிலமகள் மீதென் காதலை 
சமர்ப்பித்திருக்கிறேன் 

எண்ணிலடங்கா இன்பங்களுண்டு 
என்பெருமையை சொல்லியடங்காதென 
மகிழ்வோரைக் காண்கிறேன் - ஆதலால் 
தற்பெருமையும் கொள்கிறென் 

என்சிறப்பில் லயித்த வானம் 
தூரநின்று மகிழ்கின்றபோதெல்லாம்  
அவரின் ஆனந்தக் கண்ணீராய் 
மழை பொழிந்து மகிழ்விக்கிறார் 

இயற்கையாய் நாங்கள் கொண்ட 
சமநிலையை மறுக்கின்ற... 
மானிடனே எங்களுக்கெதிரியாகின்றனரே  
அறிவீரோ......????

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையின் வரிகள் கற்பனைத்திறன் எல்லாம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...