இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 8, 2012

விலைவாசியா..கொலைவாசியா ??


முன்னேற்றமற்ற பணப்பெறுமதியில் 
வீழ்வது மக்களாகிறது 
வருமானத்திற்கு வழியற்று 
விலை ஏற்றத்தில் முழ்கின்றனர் 


உலகப்பொருளாதாரத்துடன் 
கையேந்தும் நிலையில் 
யாசகத்திற்கும் வழியற்ற 
பொருளாதாரப்பின்னடைவு 


பெறுமதியற்ற ரூபாவினால் 
அத்தனை பெருட்களும் அயலவரிடம்
கொள்வனவில் குறைவின்றி 
விற்பனைக்கு ஏதுமற்று 
திண்டாடுகிறது நாடு 

Sunday, May 6, 2012

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை

இஸ்லாத்தினைப் பொறுத்தவரை அதன் கோட்பாடுகளுக்கு அப்பால் செயல்பாடாமல் பாதுகாத்துக் கொண்டோமானால் உண்மை முஃமீனாக விளங்க முடியும் எம்மால் முடிந்தவரை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகளில் இருந்து நாமும் தவிர்ந்து நடந்தாலே போதுமானது அனைவருக்கும் பயனுடையதாக அமையும் என்ற வகையில் மீண்டும் இதனை பிரசுரிக்கிறேன் 

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவை
  • அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது
  • சிசுக்களைக் கொல்வது.
  • தற்கொலை செய்வது.
  • விபசாரம் செய்வது.
  • ஓரின சேர்க்கை புரிவது.
  • சுய இன்பம் அடைவது.
  • மது அருந்துவது, அதை தயார் செய்வது, அதை விற்பது, எடுத்துச் செல்வது.
  • திருடுவது.
  • பெற்றோருக்கு மாறு செய்வது, அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, சீ என்று அவர்களை சொல்வது.
  • போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.
  • முஃமின்களுக்கு நோவினை செய்வது, அவர்கள் செய்யாத குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது, அவர்களைக் குறை கூறுவது.
  • அல்லாஹ்வுக்கு அதிருப்தியளித்து மக்களை மகிழ்விப்பது.
  • ஒப்பந்தங்களை உறுதி செய்தபின் அவைகளை முறிப்பது.
  • பெற்றோரை மாற்றிக் கூறுவது.
  • நெருப்பால் தண்டிப்பது, உயிர் உள்ள வைகளை, இறந்தவைகளை நெருப்பிட்டுக் கொளுத்துவது.
  • இறந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, சிதைப்பது.
  • பாவமான, தவறான, அநியாயமான காரியங்களில் பிறருக்கு உதவுவது.
  • முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது.
  • முஸ்லிம்களுக்கு கெடுதல் விளைவிப்பது, அதற்கு சூழ்ச்சி செய்வது.
  • மார்க்கக் கல்வி ஞானமின்றி தீர்ப்பளிப்பது.
  • அல்லாஹ்வுக்கு பிடிக்காதவற்றில் பிறருக்கு கீழ்படிவது. (அவர் யாராக இருப்பினும் சரியே!)
  • பொய் சத்தியம் செய்வது.
  • வீணாக சத்தியம் செய்வது.
  • ஒழுக்கமான பெண்களை பழி சுமத்தியவர்கள் தவ்பா செய்து திருந்தவில்லையெனில் அவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்வது.
  • அல்லாஹ் அனுமதித்தவைகளை ஹராம் என்று விலக்கிக் கொள்வது.
  • ஷைத்தானின் வழிகளை பின்பற்றுவது.
  • அனுமதியின்றி பிறர் பேசிக் கொண்டிருப்பதை கேட்பது.
  • அனுமதியின்றி பிறர் வீட்டில் நுழைவது.
  • தனக்கு சொந்தமல்லாததை தனக்கு சொந்தமானது என்று கூறுவது
  • தான் அனுபவிக்காததை அனுபவித்த தாகக் கூறுவது, தன்னிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது.
  • செய்யாத ஒன்றைக் கூறி புகழ் தேடுவது.
  • இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் ஊர்களுக்குள் செல்வது. (ஆனால் படிப்பினை பெரும் நோக்கத்துடன் அல்லது அழுதவர்களாக அவ்வூர்களுக்குச் செல்வது கூடும்.)
  • பாவமான விஷயத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது.
  • பிறர் குறைகளை ஆராய்வது.
  • நல்ல ஆண், பெண்கள் மீது கெட்ட எண்ணம் கொள்வது.
  • பொறாமை கொள்வது.
  • குரோதம் கொள்வது.
  • உறவுகளை, சமுதாயத்தை புறக்கணித்து வாழ்வது.
  • அசத்திய வழியில் செல்வது.
  • பெருமை, பகட்டு, தற்பெருமை, அகந்தை, அகம்பாவம், மமதை கொள்வது.
  • உலக வஸ்துக்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது.
  • பூமியில் பெருமையாக நடந்து செல்வது.
  • மக்களை விட்டும் முகத்தை திருப்பிக் கொள்வது. (அதாவது மக்களிடம் பழகுவதை தவிர்ப்பது பெருமையின் அடையாளமாகும்.)
  • கொடுத்த தர்மத்தை திரும்பப் பெருவது. (தர்மம் கொடுத்த பொருளை விலைக்குக் கூட திரும்ப வாங்கக் கூடாது.)
  • தந்தை தனது மகனைக் கொலை செய்துவிட்டால் அவரைக் கொல்வது.
  • பிறரின் மர்மஸ்தானத்தைப் பார்ப்பது. (இந்த சட்டத்தில் ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்களே.)
  • பிறரின் தொடையை பார்ப்பது. (அவர் இறந்தவராயினும் சரியே!)
  • சங்கைமிகு (ரஜப், துல் கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) மாதங்களின் கண்ணியத்தை பாழ்படுத்துவது.
  • கெட்ட வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவு செய்வது.
  • தொழிலாளியிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பது.
  • பிள்ளைகளுக்கு சமத்துவமின்றி அன்பளிப்பு வழங்குவது.
  • வஸிய்யத் செய்வதில் தவறிழைப்பது.
  • வாரிசுக்கு வஸீய்யத் செய்வது.

Saturday, May 5, 2012

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!


விழித்தெழு என் வாலிபனே 
உன் தூக்கம் கலைத்து விழித்தெழு 
உன் தலைவனின் பாதையில் 
படுகுழி காத்திருக்கிறது விழித்தெழு 


உன்னை மயங்கச்செய்த கட்சிவாதமும் 
உனக்கு ஆசையூட்டிய பசப்பு வார்த்தைகளும் 
கானல் நீராயானது இன்னுமா தூக்கம் 
விழித்தெழு உன்னை நீயறிவாய் 


சமுகத்தின் ஒற்றுமைக்காய் வாக்கிட்டு 
உன் சந்தோசத்திற்காய் காத்திருந்து 
தசாப்தங்கள் கடந்தும் பரிதாப வாழ்வுடய
உன் தவிப்பிலிருந்து விழித்தெழு 


சமுக ஒற்றுமை நோக்காகக் கொண்டு 
அடக்கு முறைக்கு சாவுமணியடித்த 
தங்கத்தலைவனின் உரைகள் மறந்து 
தாரைவார்த்த தலைவர்களின் வழியறுத்து 
வீரியம் கொண்ட விழுதுகளாய் விழித்தெழு 


அன்னியன் உனை அவமதிக்கிறான் 
ஆட்சியாளன் உனை ஏறிமிதிக்கிறான் 
நிராயுத பாணி உனை நிற்கவைத்துச் சுடுகிறான் 
உணர்வற்ற உறக்கமெதற்கு விழித்தெழு 

கல்முனைக் கொடியேற்றம்



எமது பிரதேசத்தில் அப்பட்டமான இணைவைத்தலோடு அனாச்சாரத்திற்கு வழியமைத்துத்தரும் ஒர் இடமாக இருந்துவருகின்ற கல்முனைக் குடி கொடியேற்றப்பள்ளி வாசலைப் பற்றி பரவலாக அனைவராலும் பேசப்பட்டுவருகிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால் இவற்றை ஆரம்பிப்பதற்கும் இதை ஊக்குவிப்பதற்கும் ஊரின் மேயரும் உலமாக்களும் ஒத்து நிற்பதுதான் மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கிறது


இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த விடயம் மாற்று மதத்திலிருந்து பரவிய கொடிய நோய்.  பண்டய காலத்தில் பல பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது காலப்போக்கில் திறம்பட இஸ்லாத்தை விளங்கிய ஆலிம்களால் அவை முழுவதுமாக தடுக்கப்பட்டு ஓரளவு ஏனய ஊர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது ஆனால் கல்முனை என்ற மிகப்பெரிய ஊரும் அதன் நிருவாகமும் இதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை


அங்கு என்னதான் நடக்கிறது என்று ஆய்ந்து பார்த்தால் அப்பட்டமான அனாச்சாரம் என்றோ மரணித்த ஒரு சாதாரணமான மனிதனின் கபுரைச் சுத்தி மக்கள் வலம் வருவதும் பிள்ளை கேட்டு அங்கு வைக்கப்பட்டிருக்கின்ற எண்ணையினை வயிற்றில் தடவுவதும் குழந்தைகளின் தலைகளில் தடவுவதும் அவர்களுக்கு காணிக்கை என்ற பெயரில் ஆடு மாறு போன்றவற்றை கொடுப்பதும் இன்னும் பல எழுத முடியாத வணக்கங்கள் என்ற பெயரில் இடம்பெறுகிறது

Wednesday, May 2, 2012

தவறுக்குத் தவறு நாம் செய்வதா...???



அன்பார்ந்த தோழர்களே......



காலத்திற்குப் பொருத்தமான ஒரு விடயத்தினை தங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலே நான் இட்டிருக்கின்ற புகைப்படங்கள் பரவலாக சமுக தளங்களில் உலவக்காண்கிறோம் இது முற்றிலும் எமது மார்கத்திற்கும் சமுகத்திற்கும் மாறுபட்ட விடயமாகும் இவர்களை பழிவாங்குகின்றோம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் தவறிழைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் தவறுகளை இவ்வாறு நாம் இழிவு படுத்தி பழிதீர்க்கலாகாது காரணம் எமது மார்கத்தினைச் சேர்ந்தவர்கள் இவர்கள், இவர்களை எமக்குப் பிடிக்காவிட்டாலும் இவர்களை நேசிப்பவர்களும், இவர்கள் பிரதிநிதித்துப்படுத்தும் எம் சமுகத்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காகவாவது இவ்வாறான விடயத்தினை தவிர்ந்து கொள்ளுதல் சிறப்பாக அமையும் குறிப்பாக பேஸ்புக் நண்பர்கள் இவற்றை மீண்டும் மற்றவர்ளுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் 


நடந்தேறிய(தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு) முஸ்லீம் சமுகத்திற்கு எதிரான நடவெடிக்கைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாத இந்த காலகட்டத்தில் இருக்கின்ற அத்தனை முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஆதரிப்போரை ஒரே கொடியின் கீழ் திரட்டியேனும் எமக்கான தீர்வுகளை எட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கான உங்கள் உழைப்புகளைச் செய்யுங்கள்.

தாய் தேடும் விடை

பட்ட மரங்களின் நடுவே
பட்டமரமாய் இத்தாய்
வரண்ட நிலத்துடன்
நா- வரண்ட இத்தாயோ
வேதனை தீர்ப்பாயா ? என்று
வேண்டுகிறாள் இறைவனிடம்


விதியின் விளையாட்டோ
வீணர்களின் விழைவோ 
பேறுகளற்ற பேதையாய்
விடும் கண்ணீருக்கு
விடை தேடுகிறாள்


இது போன்ற
தாயென்ற இத் தங்கங்களை
புழுதியில் புதைத்துவிட்டு
புத்திரர்களாய் வலம் வந்து 
தாய் புகள் மறந்த சேய்களாகிறோம் 


தாய் விடும் கண்ணீரில் மூழ்கி 
தரணியில் வாழ்விழந்து 
தனிமரமாய் நீயும் மாறுமுன்  
தாய்பாசத்தில் நனைந்திடுங்கள் 

Tuesday, May 1, 2012

உத்தமத் தொழிலாளி...


உதிரத்தை வியர்வையாக்கி
உலகத்தின் பசிதீர்க்க
தனக்கென உண்ணமறந்த
உத்தம அவதாரம் தொழிலாளி


ஊரார் உறவினர் உளமாற
உவகை மட்டும் தனதாக்கி
உறக்கம் தொலைத்த
உயிரில் உயர்ந்தவன் தொழிலாளி


இவன் கை சோர்ந்து விட்டால்
உலகமும் இயங்க மறுத்துவிடும்
இதுநாள்வரை ஓயாது உழைக்கும்
இயந்திரத்தில் திலகம் தொழிலாளி


இவனையும் வதைத்து மிதிக்கிறான்
ஈரமற்ற மனங்கொண்ட முதலாளி
இவனுக்கானதேதுமில்லை
இன்றொருநாள் இவன் தினமாம்
இனிய வாழ்த்தும் கூறிடுங்கள்




Related Posts Plugin for WordPress, Blogger...