இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 20, 2010

முகவரி தந்த தந்தை.......


உலகின் முகவரி
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

புல்லாங்குழல் said...

அருமையான பாச கவிதை.புகள் என்பதை புகழ் என மாற்றிவிடுங்கள்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...