இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, June 22, 2010

பேயென எழுந்த அலையே..
























சினம் கொண்ட சீற்றத்தில்
பேயென எழுந்த அலையே
கொஞ்சம் நில் கதையொன்று கேள்
உன்னை ரசிப்பதற்கே
உனையடைந்த நாட்களதிகம்
உன் அணிவகுத்த நடையும்
உன் சகாக்களின் எழுச்சியும்
பூமியை முத்தமிட்ட காட்சியும்
எங்கள் தடம் அழித்து
நாங்கள் கால் நனைத்து
உன்மேல் விழுந்து
விழையாடிய பொழுதுகளில்
உன் மயக்கத்தில் மனங்குளிர்ந்தது

பேயென எழுந்தாய்
சுனாமியானாய் அடங்காத
ஆட்டம் போட்டு
உன் இருப்பிடம் துறந்து
அழைத்தவர் வருவதுபோல்
ஊருக்குள் நுழைந்தாய்
பல்லாயிரம் உயிர்குடித்தாய்
சேதம் செய்தாய் சீர் கெடுத்தாய்
அழிவில் மீழாத் துயரில்
துடிக்கிறது மனங்கள் இன்றும்

பச்சிளம் பாலர்கள்
உலகை மறந்து
உன் மணல்மேட்டில்
விளையாடியதை பொறுக்காத நீ
இப்படி எழுந்தால்
எப்படித்தாங்குவார்கள் நின்று
என்னை வேண்டுமா தருகிறேன்
பாவம் அவர்களை வாழவிடு
வந்த வழி திரும்பி விடு....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

மதுரை சரவணன் said...

கவிதை வலி உணர்த்துகிறது. வாழ்த்துக்கள்

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி சரவணன்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...