இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, June 26, 2010

சிவாவுக்காக சில வரிகள்

சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்

ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....

அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்

பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்

தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு

ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு

புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு

இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அண்ணணுக்கு ஏற்ற அருமையான வரிகள்...

வாழ்த்துகள் இருவருக்கும்...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...