இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, June 29, 2010

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......




கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்

கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்

உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்

வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு

குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்

என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்

காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான கவிதை

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி தங்களின் வருகைக்கு

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...