இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, August 7, 2010

ஈழம் என்று மலரும்..

சொற்ப வாழ்வில்
சோகங்கள் சுமைகளாக
வேண்டும் தேவைகள்
நிறைவடையா ஆசைகளாக

நிறைந்த வாழ்வு
நிம்மதியாய் வாழ
வேண்டும் ஈழம் என்றே உரைக்க
இருந்ததையும் இழந்த பரிதாப நிலை

சொந்த மண் மறுத்த ஜென்மங்கள்
சொரிந்த குண்டு மழையில்
இரத்த ஆறுகளில் தினமும் குளிக்க
சின்னா பின்னமான ஈழக்கனவு

வாழ்வைத்தேடி அலையும்
வறிய வாழ்க்கையுடன்
வயிற்றுள் சிசுக்களும்
மலருமா ஈழம் என்றுதான் கேட்கிறது

மலரும் மலருமென்று
உரக்கக்கூறி பிரிந்து நின்று
மலரச்செய்ய முடியாத ஈழம்
சேர்க்க வேண்டிய உணர்வுளோடு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வென
உலகமே பறைசாற்ற
தமிழ் ஒற்றுமையில் உலகையாழ
மலரா ஈழமும் மலரும் இனிதே.......

ஈகரை போட்டிக்காக எழுதிய கவிதை...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஈழம் மீண்டும் மலரும் என்ற கனவுகளுடனும் நினைவுகளுடனும் உங்களின் வரிகளை கண்ட பின்பும்...

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி தோழா தங்களின் வருகை ஆனந்தம்

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...