இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, August 10, 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...

உயிரானவளே என்
உறவானவளே
உன்னுள் என்னை
உருவாக்கியவளே

பஞ்சணையில் ததும்பி
பலரசம் கலந்து
பார் மறந்த
பாவையாக்கியவளே...

நான் திகைத்த அமுதம் நீ
நாவூறும் கனிரசமும் நீ
நாளுக்கு நாள் எனைமறந்து
நான் ரசிக்கும் உலகமும் நீ

உன் காதலில் திழைத்து
உலகை மறந்து லயித்த என்னால்
உனைப்பிரியும் வாழ்வு
உணர்வற்ற ஜடமாகுமே....

மடிகின்ற நொடியோ
மாறுகின்ற நிலையோ
குன்றும் வயதோ..
குழி பறிக்கும் விதியோ...

எம் பிணைப்பில்
ஏங்குகின்ற இவைகள்
எக்காலத்தும் பிரித்திடா
ஏற்றம் கொண்டு

வாழ்வோ சாவோ..
வாசமோ துறவோ.
இன்பமோ துன்பமோ
இணைபிரியா நிலைவேண்டும்

ஈகரைக் கவிதைப்போட்டிக்காக வரையப்பட்டது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

சசிகுமார் said...

அருமை நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்கள் கவிதைகள் யாவும் அருமை.

கவி அழகன் said...

உன் காதலில் திழைத்து
உலகை மறந்து லயித்த என்னால்
உனைப்பிரியும் வாழ்வு
உணர்வற்ற ஜடமாகுமே....
அருமை.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...