இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, August 18, 2010

அடங்கிவாழும் பெண்இனம் ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்


ஆணால் ஆணைப்பெற்ற
பெண்ணானவள்
அற்புதப்படைப்பின்
அகிலம் வெண்றவள்

இன்பத்தின் உறைவிடம்
பாசத்தின் விழைநிலம்
பெண ஈர்ப்புவிசை
விதிகளின் இறுதிநிலை

ஆணையே ஏந்தும் அகிலமிவள்
பெண் இன்றிய உலகமும்
பெண் அற்ற உறவும்
வறண்ட நிலத்தில் விதைப்பதுபோல்

எல்லாமே பெண்ணாக இருந்தும்
அவள் கொண்ட அருங் குணத்தில்
ஆணுக்கு வழிவிட்டு
பின்னே இவள் நடக்கிறாள்

மதிப்பிற்குரியவளை
மார்தட்டும் சிறந்தவளை
சம அந்தஸ்தேனும்
மறுக்கின்ற ஆண்குணம்

பெண் என்றால் பணிவிடைக்கும்
தன்தேவை நிறைவுக்கும்
தயங்காமல் தட்டிப்பணிக்கும்
தயவற்ற ஆண்குணங்கள் சில

பெண்குலம் போற்றவேனும்
பெண்மனம் குளிரச்செய்ய
ஆர்ப்பரிக்கும் குணம்தவிர்த்து
உன்னாலானமட்டும்
ஒவ்வாமை நாடாதிரு

ஈகரை போட்டிக்கவிதைகளில் ஒன்று

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

கவிதை அருமை நண்பா

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி நண்பா

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...