இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, August 30, 2010

தூது செல்லாயோ...











தன்னந்தனியே எனை
தவிக்க விட்டு
தனிமையுடன் என்னவன்
தத்தளிக்கிறான் கண்டீரா

உதிரம் முழுதும்
உணர்ச்சி பொங்கிட
உயிராய் காதலை அழித்து
உறக்கம் கலைத்தவன்

நான் இழுத்த சுவாசத்தை
நாதமாய் வெளிவிட்டவன்
நான் தூங்க மடியேந்தி
நாள் தோறும் தாலாட்டியவன்

பிரிவு எனும் துயர்தந்து
பித்துப்பிடித்த நிலைதந்து
பிஞ்சு மனதை கெஞ்சவைத்து
பிரிந்து வாழ்கிறான் எனை தூரமாக்கி

கண்ணாளன் என்
கதிரவனை காணும்வரை
கருமுகிலில் மூழ்கிய
கன்னியாகிறேன் கண்டீரா..

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

குறிப்பு: படம் கண்டதில் உதித்த வரிகள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

அருமை நண்பா

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி தோழா

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...