இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, July 16, 2010

தூரத்தில் இருந்து தூது மட்டும்











ஈழத்து உயிர்கள் சில
ஈழத்துயர் துறந்து
உயிர்களை மட்டும் கையிலெடுத்து
ஈழ தேசம் விட்டகல

துரதிஸ்டம் விடாமல் துரத்தி
மற்றுமொரு தேசம் சிறைபிடிக்க
விசாரணை எனும் பெயரில்
விபரம் தேடி வஞ்சிக்க

நாட்களும் கடந்து
வருடமும் கடந்தும்
அப்பாவிகள் என்று தெரிந்தும்
அடிமையாக்கியது அத்தேசம்

கண்முன்னே காட்சிகளும்
கதிகலங்கும் நிகழ்வுகளும்
அவதியுறுகிறது தமிழினம்
பராமுகத்தில் தமிழ்த்தேசம்

அத்தனையும் குரல் கொடுக்கும்
அகிலத்தின் தமிழினமே
உயிராவது திறக்க வழியற்று
உயிர் மாய்க்கிறது உறவுகள்

உடனிருக்கும் நிகழ்வுகளுள்
இதுவும் ஒன்றுதானே...
ஒத்திசைத்து உரத்துக்கூறி
இதற்கு விடை காணலாமே..

மலேசிய தேச தமிழர்களே
ஒன்று பட மாட்டீரோ..
தூரத்தில் இருப்பதால்
தூதுவிட மட்டும் முடிகிறது....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...