கண்மணி உன் கண்ணீரோடைக்கு
அணைகட்டிடத் துணிந்து ஆங்காங்கே
சகோதரன் வெருண்டெழுகிறான்
இன்றே துடைத்திட ஏற்றம் கொள்கிறான்
மாற்றான் பிச்சையில்
கையேந்தும் நிலையறுத்து
பகல்கொள்ளையில் சுகங்காண்பதை
பரிகாசத்துடன் வெறுக்கிறான்
ஆண்ணென்ற தன்மானத்துடன்
ஆதிக்கம் அவனுக்காகிட
பெண்ணாதிக்கம் வெறுத்து
பெண்ணையாளத்துடிக்கிறான்
மலர்போன்ற பெண்ணானவளை
அவன் உழைப்பிலேந்தி
வாழ்நாளுக்கு வசந்தம் சேர்த்திட
வாகையவன் செய்திட்டான்
சீதனக்கொடுமையில்
சீதையெம் கண்கள்
சிந்தும் கண்ணீர்களை
சீர்செய்திடத் துணிந்துவிட்டான்
வாலிபத்தேவையால் இசைந்து
மார்க்கத்திற்கு மாற்றமாக
மகிழத்துடிக்கும் மனங்களை
எச்சரித்திடவும் புறப்பட்டுவிட்டான்
வேதவிழுமியங்கள் மறந்துதிடாது
வீணர் புத்தியிலிசைந்திடாது
உன்னால் செல்வமடைந்டையாத
செல்வந்தனாக உத்தேசிக்கிறான்
சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில்
முழுமையான இஸ்லாமினாய்
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான்

1 comments:
அருமையான கவிதை...
Post a Comment