இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 27, 2011

தீயிற்குள் தென்றல் நீ......

அண்டசராசரங்கள் அகமகிழ்ந்த
உன்நிழலின் தரிசனத்தில் 
அரியணை சுகம் அடைந்தும்
அகன்றுவிட்ட இன்பங்கள் தேடி

முட்கள் மீது விரிப்பிலுறங்கி 
சேற்றில் விழுந்த சிறு எறும்பாய்
கத்திமீது தடுமாறுவதாய் நாட்கள்
என்றும் தீயில் விழுந்த பட்டாம் பூச்சி....


ஏற்றிடாத வாழ்வோடு ஏறிவிட்ட விமானம்
எப்போது இறங்கிடுமென்ற ஏக்கம்
உன் நினைவுத் தீயிலிருந்து
மீளாத்துயரோடு மீட்டாத வீணையாய்

எரிகற்களாய் இரையானபோதும் 
உன்னாலொரு வசந்தம் நிஜமாகிறது
உனக்காகவே உலகமென்று
உள்ளமிசை பாடுகிறது

அத்தனையிலும் ஆறுத
சுகந்தம் தரும் தென்றாலாக நீ 
உன் மொழியில் உயிர்க்கிறது 
இறக்கின்ற என்னிதயம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Anonymous said...

arumaiyaaga ulladhu.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...