இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, November 13, 2011

காதலின் காணிக்கை


காதலெனும் புனிதம் 
காதலெர்களால் கெட்டுவிடுகிறது 
காதலென்று சொல்லி 
ஏமாற்றமங்கு நடக்கிறது 


விழுந்து விழுந்து 
காதல்வலை வீசியதில் 
காதலுக்கே ஹீரோவென்று 
கானமங்கு இசைக்கிறது 


கண்டதும் முத்தம் 
கை பட்டதும் அணைப்பு 
தொட்டதும் ஈர்ப்பு 
தொடர்ந்ததும் அனுபவிப்பு 


மயங்கிய காதலர்கள் 
நம்பிக்கையை காணிக்கையாக்கி 
ஈருடல் ஓருயிரென்று 
ஈனமங்கு அரங்கேறுகிறது 



ருசிகண்டவன் காதலனாகி 
கற்பிழந்தவள் காதலியாகி 
ரசனைக்கு மதிப்பிழந்து 
சலசலப்பங்கு உருவாகிறது 


காக்க வேண்டிய கற்பும் 
நோக்க வேண்டிய கண்ணியமும் 
காதலால் கெட்டதென்று 
வெறுப்பங்கு வேர்களாகிறது 


ஒத்துவராத காதலென்று 
சாதாரணமாய் குட்பாய் சொல்லி 
இன்னுமோர் புனிதனுக்கு (வளுக்கு)
துரோகமங்கு தயாராகிறது 


காதலுக்கொரு காணிக்கையாய் 
தொடுகையற்ற காதலோடு 
மதிப்பளிக்கப்பட்ட உணர்வுகளை 
இருமனமாற திருமணத்தில் 
அனுபவித்துப்பாரங்கு நீ வாழத்துடித்திருப்பாய் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

PracticalPrabhakaran said...

ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி...

Good one...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...