இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, July 6, 2010

கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரி...


பாசமான அக்காவின்
பரிவான வரிகளில்
பாவலர்கள் மயங்கிட
பாவெழுதிய புலவர்மணி

அழகான கவிதைகளுடன்
அன்பான உரையிட்டு
அறிவுரையும் பல தந்து
ஆதரித்த அன்புள்ளம்

எதிர்பாரா இறை பரீட்சையில்
ஏங்கும் இன்நாட்களில்
எழிய மனமும்
ஏக்கங்கள் நிறைந்திடவே..

உறவுகள் பல
உலக நடப்பை விவரித்து
உரிமையுடன் கைகோர்த்து
உடனிருப்பதில் ஆறுதல்

கவலை விட்டகலா
கணப் பொழுதுகளில்
காரண நிறைவுக்கு துஆவுடன்
காத்திருக்கும் அன்பு உறவுகள்

அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள்

அதிகம் நோகாது
அதற்கான வழிகளில்
அடி எடுத்து வைத்திட்டால்
அவற்றை உடன் வென்றிடலாம்

ஈகரை உறவுகளுடன்
உம் மன ஆறுதலுக்காக
ஒன்று கூடி பிரார்த்திக்கிறோம்
அத்தனையும் மறந்து
கலந்து நீயும் செல்வாயோ....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

எல்லாம் அவன் செயல்... எல்லாம் நல்லபடியாக நிகழும்...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...