இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, July 8, 2010

மறுவாழ்வு மலருமா?







என்னுலகம் குறுகியது
என்னருமை புரிகிறது
என்னாழும் வலம் வருகை
எப்போது மறுவுலகம்

வயிற்றின் உள்ளேயே...
வெகுவாக வளர்ந்த நானும்
வேறு வழி இல்லாமல்
வலி கொடுத்து சுமைதீர்க்க
காத்திருக்கிறேன்..

உன் வயிற்றுச் சுவர்களில்
உரிமையுடன் உதைக்கிறேன்
உணர்வுகளுடன் மகிழ்கிறாயா? இல்லை
உளம் நொந்து வேகுறாயா?

எட்டி நின்று காணும்
எத்துயரும் அறியாத் தந்தை
எள்ளளவும் நோகாமல்
என்னளவில் மகிழ்கிறார்

எதார்த்தமான இன்னிகழ்வில்
இறைவனின் கருணையுடன்
என்நிலையும் உன்நிலையும் மாறா
மறுவாழ்வு மலருமா? அம்மா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

கவி அழகன் said...

கனம் நிறைந்த வரிகள் அர்த்தம் நிறைய உண்டு

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி நண்பா

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...