இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, July 12, 2010

வீதியே விதியாவதா?..












அனாதரவாய் கைவிட்டதில்
அகம் அழுகின்ற குறைபாடாய்
அல்லலுறும் பிஞ்சுகளின்
அவலம் தீர்ப்பாருண்டா

கண்களில் ஏக்கத்துடன்
கவலையின் உச்சத்தில்
கதிகலங்கும் இன்னிலையினை
கருணையுள்ளம் நோக்கவில்லை

வீதியை வீடாக்கி
மடியினை மெத்தையாக்கி
கவலையற்ற மறு உறவை
உறங்கிட செய்த செல்லக்குணம்

பெற்றவரை நோவதா
பிறந்த உலகை நோவதா என
பிற்காலம் வெல்வதற்காய்
நீந்துகின்ற பாலகன்

இதுபோன்ற செல்வங்களால்
இவ்வையகம் நிறைந்துவிட
சொல்பவனும் செய்யாது
செய்பவனுக்கு வழி செய்யாது
விரண்டோடுகின்ற சமூகம்

விதியின் விளையாட்டில்
வீதியியே விதி என்று
வெந்தழுகின்ற மழலைகளை
வேரோடு அறுத்தெறிய வேண்டாமா?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

ஹேமா said...

நிறைவான கவிதைகள் நிறைஞ்சிருக்கு ஹாசிம்.முன்னுள்ள இரண்டு பக்கங்கள் பார்த்தேன்.சில கவிதைகள் மனசுக்குள் பாரமாய் இறங்கிவிட்டது."உயிகாக்க ...உண்ணாநிலை"அருமை.ஒரு நாடகத்தைக்கூட கவிதையாக்கிவிட்டீர்கள்.

// பெற்றவரை நோவதா
பிறந்த உலகை நோவதா என//

பிறந்த இனத்தை நோகவேணும் ஹாசிம்.

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி ஹேமா தங்களின் வருகையும் அற்புதமான தட்டிக்கொடுப்பும் இன்னும் ஊக்கமளிப்பவையாக இருக்கிறது மிக்க நன்றி

Unknown said...

சமுதாயப் பார்வை கொண்ட கவிதை.. உணர்வு மிக்க வரிகள்... ..

கவி அழகன் said...

very good

Harini Resh said...

hm nandraga irukkurukkiradhu ungal kavithai.

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி செந்தில் தங்களின் மறுமொழிக்கு

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி யாதவன்

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி ஹரிணி தங்களின் வருகை ஆனந்தமாக இருக்கிறது

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...