இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 5, 2011

விழிகளிங்கு தவமிருக்கிறது

என்னவனே என்னுயிரே
துயில் தேடும் கண்களோடு 
தனிமையின் தவிப்பில் 
விழிகளிங்கு தவமிருக்கிறது 

பஞ்சணையில் தனித்து 
பருவத்தின் வெம்பலில்
மோகத்தின் வேட்கையோடு
 காலத்தை வசைபாடுகிறேன்

என்னெதிரே காட்சிதந்து 
எனக்கென்று வேதமுரைத்து
என்னோடிருந்த நிம்மதியை
காதலனாய் திருடிச்சென்றாயே


தொட்டபோது ஸ்பரிசத்தையும் 
(முத்தம்)இட்டபோது தாகத்தையும் 
விட்டபோது தேடலையும் 
நிரந்தரமாய் தேவையாக்கினாயே

நீ என்னோடு உள்ளபோது 
உணர்ந்திடாத உணர்வுகளை 
நித்திரை தொலைத்திங்கு 
அசைபோடச் செய்கிறதே...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...