இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, September 9, 2011

நீவருவாயென.....

இறுக்கம் தொலைந்த நள்ளிரவில்
மலர்ந்த உன் மற்றொரு பிறந்தநாளிலும்
நானற்ற தனிமையில் தூக்கமின்றி
நீதேடிய அணைப்பினை தரமறுத்த பாவியாய்
தொலைவிலிருந்து வாழ்த்துகிறேன்


தொட்டுணர்ந்த காதலும்
பட்டுணர்ந்த காதலும்
எட்டிநின்று ஏளனம் செய்கிறது
ஏவாளின் காதலாய் சேரத்துடிக்கும்
தினங்களுக்காக காதலுமங்கு
பிரார்த்தனை செய்கிறது


நிவர்த்திக்கப்பட்ட நியாயங்களும் 
நிர்கதியான நிலமைகளும்
நிம்மதி தேடியங்கு 
நிழலாய்த் தொடர்கிறது 


காதலில் உயிராய் 
காலத்திற்குத் துணையாய் 
பாசத்திற்கு நிகராய் 
அன்பின் உறைவிடமாய் 
உலக ஜனனத்தில் எனைச் சேர்ந்தாய் 


உன்னோடுள்ள வாழ்க்கையில் 
உயிர்பெற்ற உணர்வுகளோடு 
உடனிருப்பது நீயென்றுனர்ந்து 
உலகவலம் வருகிறேன் 
உயிருள்ளவரை நீவருவாயென......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

காந்தி பனங்கூர் said...

ஒவ்வொரு வரியும் ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...