இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, September 10, 2011

உணராதவரை ஊழல் அழிந்திடாது........



ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட 
ஊராரை ஏய்த்துழைத்து 
உன்னுலை பொங்கிடாதே...


உன்னொருத்தனின் ஆசையில் 
தேசத்தின் தலையெழுத்தென்று 
நேசங்கொண்டோரின் வசையில் 
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்


தனிமனித ஒழுக்கத்தோடு 
பிணைந்துவிட்ட ஊழலுக்காய் 
அரசுநோக்கிய பிடியாணை 
பிறப்பிப்பதில் நியயமுண்டோ 



சட்டங்கள் வகுத்தாலென்ன 
சாசனங்கள் ஏற்றினாலென்ன 
அந்தரங்கமாய்க் கைநீண்டும் 
புத்திசாலித் திருடன் உணர்ந்து 
திருந்த வேண்டாமா 


காகிதமாகிய பணத்திற்காய் 
தன்மானத்தினை விற்று 
சுயநலத்துடன் சுகங்கள் தேடி 
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது 


தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன் 
திருந்திடாத மானிடனிருக்கும்வரை 
எத்தனை லோக்பால் வந்தாலும் 
ஊழல்தான் அழிந்திடுமா??

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

rajamelaiyur said...

//
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
//
நல்ல கேள்வி .. ஆனால் பதில் ?

rajamelaiyur said...

சமுக அக்கறை உள்ள கவிதை

rajamelaiyur said...

//
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
//
உண்மை நண்பா .. காசே தான் கடவுளடா

காந்தி பனங்கூர் said...

//தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//

சரியா சொன்னீங்க சார். அவர்களாக திருந்தினால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.

கவிதை நடை அருமை நண்பா.

அம்பாளடியாள் said...

அருமை அருமை ஊழலுக்கு எதிரான தங்கள்
உணர்ச்சி பொங்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்
சகோ .முடிந்தால் என் தளத்திற்கும் வந்துபோங்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...........

அம்பாளடியாள் said...

என் ஓட்டுக்கள் மூன்றும் இட்டுவிட்டேன் வாழ்த்துக்கள் .

ezhilan said...

நல்ல கவிதை.அன்னா ஹ்சாரே வரிசையில் சேர ஆசையா?
நேரம் இருக்குபோது எனது தளத்திற்கும் வாருங்களேன்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...