இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, September 12, 2011

வாழும்போதே சாதித்திடு



வேட்கையுண்டு வாழ்வில்
வீர் கொண்டெழு மனிதா
வாழும் போது நீ சாதித்திடாத
சரித்திரங்களெதுவும்
சாவுகளோடு நிலைத்திடுவதில்லை


தலைமைகள் எமக்கு வழிகாட்டியாகி
அத்தனையிலும் சாதித்தவர்களாக
அவர்களின் சாகசங்களை
அடுக்கடுக்காய் அசைபோடுகிறோமே


அதிகாலை எழுந்தது முதல்
அந்திமாலை உறங்கும் வரை
உன் பயணத்தின் அசைவுகளோடு
உன்நிலையின் உசிதமதை
கேள்வி கணக்குடன் வகுத்துப்பார்



தீமைகளுக்கு வித்திட்டவனா
நன்மையொன்று செய்திருந்தேனா - என
நாட்களின் நகர்விலும் ஆயுழின் தேய்விலும்
சரிசெய்திடாத வாழ்வில்
ஜெயித்திட முடிந்திடுவதில்லை 


புத்தகப் பூச்சியாய் வெளியுலகறிந்திடாது 
நடப்பது பிறருக்கென்று தன்னலங்கருதி 
ஓடியெழிந்து சந்தோசம் தேடுவதில் 
நாளைய சந்ததிக்கு சரித்திரமாகிடாது 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

காந்தி பனங்கூர் said...

விழிப்புணர்வு பதிவு நண்பா. வாழ்த்துக்கள்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...