இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, May 1, 2011

போராடும் தொழிலாளர்

உதிரத்தினை உரங்களாக்கி 
வியர்வையில் தினமும் நனைந்து 
உடல்நலம் மறந்த 
உண்மையான உழைப்பாளி 


உண்ண மறந்திருந்து 
உறவும் பிரிந்திருந்து 
திருப்தியான ஊதியத்திற்காய் 
தினம்தினம் போராட்டம் 


நாட்டின் அபிவிருத்தியை 
சிந்திக்கும் அரசுகளும் 
ஆணிவேர் தொழிலாளரென்று மறந்து 
அவன் முன்னேற்றம் கருதாத 
ஆட்சியாளர் கூட்டங்கள் 


அதிகநேரம் வேலைவாங்கி 
சம்பளத்தையும் தரமறுத்து 
இவன் சிந்திய உதிரத்தில் 
சொகுசாய் வாழும் முதலாழிகள் 


குழந்தையின் கல்வியென்றும் 
குடும்பத்தின் பராமரிப்பென்றும் 
ஒருதவணை உணவுக்காய் 
திண்டாடும் தொழிலாளர் 


எவ்வர்க்கமாகினும் உணர்ந்து 
தொழிலாளர் வர்க்கம் சிறந்திட 
சிந்திக்காத மனிதர்களை 
சீர்செய்யும் தினமாகட்டும் இன்னாள் 
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

கவிதை அருமை

Balamanian said...

அருமையான கருத்துக்களை ,
அழகாக கோர்த்த கைகளுக்கு வாழ்த்துக்கள்.

ரமணீயன்
(T.N.Balasubramanian)

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...