இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, July 27, 2011

மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது



மனித வாழ்வின் அந்தம் மரணமாகிறது 
மரணமும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது 
மனிதனாய் உன்னை வளப்படுத்திடு 
நித்தியமற்ற உயிரோடுள்ளதுன் வாழ்வென்று 

எங்கு மரணம் கண்டாலும் 
மனம் மட்டுமே போராடுகிறது 
மதியின் போராட்டத்தில் 
நாட்களே வென்றுவிடுகிறது

சோகங்களெமை ஆழம்போது 
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது 
உறவொன்றின் சோகமெமை 
நிலைகுலைந்திடச் செய்திருந்தது 


சேனையில் சுழன்றிருந்த அன்னையின்றி 
சூறாவளி வீசி ஓய்ந்த நிலை உணர்ந்தோம் 
துக்கத்தில் மீண்டிடாத உறவுகள் கண்டோம் 
நட்புக்கு விலை இதுவென்றுணர்ந்தோம் 

எதிர்பார்ப்பற்ற உறவிதுவென்று 
எத்திசையில் சோகமெனினும் 
மறுதிசையில் வலியுணர்ந்தோம் 
தேறுவதற்காறுதல் கூறிநின்றோம் 

நண்பர்களுக்காறுதலாய் 
பாவெழுதிய தமிழன்னையே 
உமக்காறுதலுக்காய் வரிதேடிக் 
கைசேதமாகி நிற்கிறேன் 
உமக்காக எங்களது பிரார்த்தனைகள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

செய்தாலி said...

//எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது//

சிறப்பான வரிகள் நண்பா

vidivelli said...

சோகங்களெமை ஆழம்போது
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது
உறவொன்றின் சோகமெமை
நிலைகுலைந்திடச் செய்திருந்தது /


அருமையான ரொம்ப நல்ல கவிதை..
வாழ்த்துக்கள்..

vidivelli said...

எங்கு மரணம் கண்டாலும்
மனம் மட்டுமே போராடுகிறது
மதியின் போராட்டத்தில்
நாட்களே வென்றுவிடுகிறது


supper...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...