இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, April 16, 2012

காதலும் கண்ணீர் சிந்துகிறது


கண்ணென வளர்ந்தவர்கள் 
காதலர்கள் ஆனதினால் 
எதிரியாய்க் காணச்செய்து 
கல்லறைக்கு அனுப்பினார்கள் 


காளையவன் உளளத்திற்கு 
காயத்திரி தெய்வமானாள் 
காதலெனும் பூஜை செய்து 
மண்டியிட்டான் காலடியில் 


பூசாரியாய் பெற்றோர்கள் 
எரியவைத்த கற்பூரங்களால் 
பற்றிக் கொண்டதங்கு காதல் 
பூமாலை பிணத்திற்கல்லவா 
சூடிவிட்டனர் 



மணமுடித்து மகிழவேண்டிய 
இரு உள்ளங்களின் -
அமங்கலத்திற்கு மலர்தூவி 
இளங்காதலுக்கு சமாதியொன்று 
கட்டிவிட்டார்கள் 


காளையவர்கள் காதலுக்காய் 
உயிர்துறப்பார்கள் என்றறியாது 
காவுகொள்ளச்செய்த -
காதலுமங்கு கண்ணீர் சிந்துகிறது 



காதலொரு குற்றமென்றுகாணும் 
காதலர்களின்னும் வையகத்தில் 
உங்களின் உள்ளத்திலும் காதலுண்டு 
கண்திறந்து பாரீர் பெரியோர்களே.......



காதலை எதிர்த்ததால் தற்கொலை செய்து கொண்ட காதலர்களின் பிணத்திற்கு திருணம் செய்து அடக்கம் செய்ததாக ஒரு செய்தி கண்டேன் அவற்றை மையமாக வைத்த எனது வரிகளிவை
நாகரீகம் வளர்ந்த இந்த உலகில் இன்னும் காதலை எதிர்ப்பவர்களும் காதலுக்காய் உயிர்திறப்பவர்களும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள் எதிர்க்காதீர்கள் காதலை முடியுமானவரை வாழவையுங்கள்
இறந்தவர்களுக்கு சமர்ப்பணம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

ஹேமா said...

காதல் என்றாலே ஆராயாமல் சில பெற்றோர்கள் பேய் பிசாசைக் கண்டதுபோல அலறுகிறார்கள்.இப்படியான முடிவுகளைத் தாங்குவார்களா !

ஹேமா said...

படம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.எடுத்துக்கொள்ளுங்கள் !

http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...