இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 18, 2012

ஓர் தீக்குச்சி வேண்டும்.....



ஓர் தீக் குச்சியைத் தந்துவிட்டுப்போ
என்மனதில் கொழுந்துவிட்டெரியும்
தீ கொண்டத்தனையும் எரித்துவிட


பசியால் ஒரு பட்டாளம் பரிதவிக்கிறது
குசியால் ஒரு சாரார் கும்மாளமடிக்கிறார்கள்
பகிர்ந்தளித்திட ஒரு தீ மூட்ட வேண்டியிருக்கிறது


வயதால் விதவையாகி வஞ்சிக்கப்டுகிறாள் - மாது
வரதட்சனை வேண்டுமென்று புரட்டியெடுக்கிறான் - காளை
காலமது சொற்பமென வாழ்வைக் கற்றுத்தர
தீயிட்டல்லவா உருக்க வேண்டியிருக்கிறது


குழந்தையொரு செல்வம் செழிப்பும் அதிலுண்டு
மறந்த முதலாளர்கள் குழந்தைகளில்
சம்பாத்தியம் செய்கிறார்களே - அவர்களது
உடமைகளையும் சாம்பலாக்க வேண்டியிருக்கிறது


வேண்டாம் வேண்டாமென்று கூக்குரலிட்டும் 
பாவம் மனிதர்களை வதைசெய்து 
ஆட்சி பீடத்தில் சல்லாபம் காணும் - அரசன் 
அவனின் ஆட்சியை கொழுத்த வேண்டுடியிருக்கிறது 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Admin said...

சபாஷ்..

செய்தாலி said...

ம்ம்ம்ம்
அருமை சகோ

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி தோழர்களே

ஹேமா said...

மன அவதிகளைத்தானே எழுத்தால் கொழுத்திக்கொண்டிருக்கிறோம்.அருமை தோழரே !

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...