இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, November 24, 2010

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.....

அம்மா என்றழும் எனை
ஆரத்தழுவி அணைத்து 
உச்சி மோர்ந்து பாசத்துடன் 
பாலூட்டு அன்னையே..

அகமகிழும் உள்ளத்துடன் 
பசிதீர்க்கும் உனை ஏந்தும் 
பாலகனாய் வளர்ந்திடுவேன் 
உன்பாசமே என்னுள்ளும் 
உதிரமாய் ஓடிடுமே...

உன்னழகை காத்திடவே 
என்னுணவை மறுத்துவிட்டு 
புட்டிப்பாலும் நிரப்பி 
ஆயாவிடம் பணி கேட்கிறாய்...

குணமற்ற வேலைக்காரியாய் 
கடமைக்காய் உணவூட்டி
வெறுப்பிற்கு வித்திட 
வளர்வேனா நல்லவனாய்...

என்தேவை நிறைவுக்கு 
ஒருதாயும் அன்று கொடுத்தாய் 
உன்தேவை நிறைவுக்கு 
இன்று ஒரு தாய் பணித்துவிட்டேன்

அம்மா விதைத்தவள் நீயானாய் 
அதை அறுத்தவன் நானாவேன் 
என் குழந்தை வளர்ப்பிற்கு 
நல்வழி நாடிவிட்டேன்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

கவி அழகன் said...

கவிதை அருமை நண்பரே... சுகம் தானே?

சிந்தையின் சிதறல்கள் said...

@யாதவன்

மிக்க நன்றி தோழா நான் நலம்

நிலாமதி said...

அழகான் கவிதை நல்ல உள்ளங்களை தேடும் ஹாசிம் க்கு என் பாராடுக்கள்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...