இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, July 11, 2011

அரசியல் நீதவான்கள்.....



ஆதிமனித அவதாரம்தொட்ட
ஆட்சி பீடங்களின் சலசலப்புகள்
மனிதன் வாழுமிடங்களெல்லாம்
ஆளுகின்ற வர்க்கங்கள்

சமகால அரசியலில்....
சிம்மாசனம் ஏறும்வரை ஏதுவாதப்பிரச்சாரங்கள்
விமர்சனங்களின் பிரதிபலிப்பில்
எதிரிகளாகும் வாக்காளப்பெருமக்கள்

போர்க்களங்களாய் மாறி
வஞ்சம் தீர்க்கும் நெஞ்சங்களாய்
என் கட்சி உன்கட்சியென்று
அனியாயமாய்ப் பாமரனின் உயிரிழப்புகள்

வெல்வது நோக்கமாகி சுயநல அரசியல்வாதியாய்
வீழ்ந்தவனைக் கருதிடாத வெற்றிக் களிப்புகளோடு
எதிரிகளானவர்களை வேரோடறுத்திட
வகுக்கும் வியூகங்களே ஆட்சியாகிறது

எத்தலைவன் வென்றாலும்
எதிர்த்தவனும் நாட்டின் பிரஜையென்று
அனைவருக்கும் சமநிலை அரசாட்சியில்
அரசியல் நீதவான்கள் ஆவீர்களே..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

arasan said...

சிந்திக்க தூண்டும் வரிகள் நண்பரே

vidivelli said...

போர்க்களங்களாய் மாறி
வஞ்சம் தீர்க்கும் நெஞ்சங்களாய்
என் கட்சி உன்கட்சியென்று
அனியாயமாய்ப் பாமரனின் உயிரிழப்புகள்/

அழகான கருத்து நிறைந்த கவிதை
வாழ்த்துக்கள்...

!!!!என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...