இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, May 17, 2012

காதலின் வெற்றி



கண்ணெதிரில் கடந்தாயொரு மின்னலாய் 
கண்பார்வை வீ்ச்சில் சிக்கிவிட்டேன் மீனாய் 
கவர்ந்ததன் மாயமென்னவென்றேன் 
காவியிலும் தடுமாறச் செய்யும் 
கன்னியுன் காதலென்று உணர்த்திவிட்டாய் 


திடமான உறுதிகொண்டும் 
திருவாசகம் ஓதிக்கொண்டும் 
திரும்பியேனும் பார்காது - எனைக்
காத்துநின்று வீற்றிருப்பேனென்றவெரை 
காலில் விழச்செய்யும் சக்தியாம் காதல் 


மனிதனாய் மலர்ந்ததுமே 
காதலனாய் ஆனாயென்ற கருவில் 
மானிடனின் வாழ்வோடு பிணைந்து கொண்ட 
அற்புத உணர்வும் காதலென்று 
வீழ்ந்தவரெல்லாம் விலகிநிற்கின்றனர் 


காதலும் காமமும் காரணமாகி 
அன்பும் பாசமும் விழைவுகளாக 
காலத்தையும் வாழ்வையும் கடத்தும் 
மனித ஜனனத்தின் நிகழ்வில் 
நிலைத்திருக்கிறது உலகம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...