இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 1, 2012

உத்தமத் தொழிலாளி...


உதிரத்தை வியர்வையாக்கி
உலகத்தின் பசிதீர்க்க
தனக்கென உண்ணமறந்த
உத்தம அவதாரம் தொழிலாளி


ஊரார் உறவினர் உளமாற
உவகை மட்டும் தனதாக்கி
உறக்கம் தொலைத்த
உயிரில் உயர்ந்தவன் தொழிலாளி


இவன் கை சோர்ந்து விட்டால்
உலகமும் இயங்க மறுத்துவிடும்
இதுநாள்வரை ஓயாது உழைக்கும்
இயந்திரத்தில் திலகம் தொழிலாளி


இவனையும் வதைத்து மிதிக்கிறான்
ஈரமற்ற மனங்கொண்ட முதலாளி
இவனுக்கானதேதுமில்லை
இன்றொருநாள் இவன் தினமாம்
இனிய வாழ்த்தும் கூறிடுங்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கவிதை ! பாராட்டுக்கள் நண்பரே !

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...