இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, December 26, 2010

சிறகொடிந்த பறவைகள்


சின்னஞ்சிறுசுகளாய்
சிதறித்திரிந்த சிட்டுகளாய்
கவலைகளறிந்திராத
வேளைகளோடு பயணித்தோம்


தந்தை உழைத்திருக்க
தாயும் அரவணைக்க
சகோதரப் பாசங்களுடன்
சந்தோசமே காலங்கள்


பள்ளித்தோழரென்றும்
பண்பான உறவுகளென்றும்
பாசங்கலந்திருந்த
பாதைச் சரசங்கள்...


பங்கம் விளைந்ததென்று
சொந்தம் காத்திட
சுவர்க்கம் இருக்கிறதென்று
சுகமறுந்த தேடலின்று


நாடு துறந்திருந்து
தேசம் கடந்த சேதங்களாய்
நாளும்பொழுதும்
தவிப்பே தாரமாகிறது...


தனிமை துணையென்று
காண்பவை தயவென்று
உண்பது உயிர்வாழ
உழைப்பே குறியாகிறது


சகிப்பை வேதமாக்கி
எதிர்ப்புகளின் உச்சத்தில்
எல்லையில்லா இன்னல்களுடன்
ஏக்கங்களின் ஆழுமையிங்கு 


வாழமுடியாத வாழ்கையொன்றை
வாழத்துடிக்கின்ற உயிர்களாய்
இறைக்கையுடைந்து உலவுகின்ற 
பறவைகளாய் நாங்களும் இங்கு.......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தினேஷ்குமார் said...

"இறைக்கையுடைந்து உலவுகின்ற"

"சிறகுடைந்து உலவுகின்ற"
சிறகுகள் என்று மாற்றினால் நன்கிருக்கும் என்று தோன்றியது நண்பரே

கவிதை அருமை .........

பனித்துளி சங்கர் said...

உணர்வுகளின் உச்சத்தில் கசிந்திருக்கிறது இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...