இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, December 27, 2010

மாமியாரான தாயவள்

மாமியென்ற பந்தமும் 
மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்


கணவனின் தாயவளை 
என்தாய் போன்றவளென்று 
நண்மை செய்துவிடின் 
நலம் காணலாமதிகம் 


புதிதாய் புகுந்தவீடேறி 
புதுமையாய் காண்பவளை
குழந்தை வளர்ப்பதுபோல் 
தாயாய் வழிகாட்டி நின்றால் 
மகளாய் மாறி ஏந்தமாட்டாளா?


செல்வச் செழுப்பினிலோ
அடங்கிய ஆட்சியினிலோ வளர்ந்த
மாற்றான் முற்றத்து மலரவளை 
கசங்கிடாது காத்திடத்தான் மாட்டீரோ...


மாமியாரென்ற தாயவளின் 
கருத்தோடொத்திசைந்த மருமகளாய் 
காவியம் படைத்துவிடு 
கண்ணியம் பல பெற்றிடுவாய் 


வீட்டுச் சந்தோசத்தின் 
துருவங்களான உங்களின் 
அணிசேர் ஐக்கியத்தில் 
குதூகலந்தான் கிடைத்திடுமே...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

தினேஷ்குமார் said...

சார் சூப்பர் அருமையா சொல்லிருக்கீங்க

ஸாதிகா said...

வாவ்..அருமையான அறவுரை.அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள்.

சசிகுமார் said...

சூப்பர்

ரஜின் said...

ம்ம்..உண்மைதான்,,,

இதை பல மருமகள்கள் புரிந்து கொள்வதில்லை என்பதே வருத்தமான உண்மை..மாமியார் கொடுமைகள் எல்லாம் மலையேறிப்போய்..இப்போது விதிவிலக்காக ஒன்றிரண்டு...

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...