இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 2, 2010

ஆழுமையுடையதாய் ஆகட்டும்....




என் பேனா முனையில் 
எழுந்த அலைகளாக
எழுச்சியுடன் ஓயாது - நான் 
எழுதிடும் கருக்கள் - என் கவிதைகள்

கவிதைகளாக வலம் வர
கவிஞர்கள்,மேதைகளெல்லாம் 
கண்ணியமாய் பின்தொடர்ந்து 
கருத்துகளோடு செதுக்கினர்..

செதுக்கப்பட்டமையால் படைத்திட
செப்பனிடப்படுகிறேன் - ஆதலால் 
செஞ்சோற்றுக்கடனாய் -தமிழுக்கு 
செறிந்த நன்றிகள் உரைக்கிறேன் 

உரைகள் பல்லாயிரம் கண்டாலும் 
உணர்வுகளை தட்டிஎழுப்பிட
உரித்திடும் வரிகளாலேயே
உயிர்பெறும் ஆக்கங்கள் 

ஆக்கங்கள் பல்லாயிரம் ஆகிடலாம் 
ஆண்டுகள் பல கடந்தாலும் 
ஆட்சி எம் படைப்புகளாலாகட்டும் 
ஆழுமையுடையதாய் படைத்திடுவோம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

கவி அழகன் said...

நல்ல கவிதை
கவிதையை பற்றியா எண்ணங்களை பற்றியா
வாழ்த்துக்கள்

சிந்தையின் சிதறல்கள் said...

@யாதவன்மிக்க நன்றி நண்பா

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...